ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார் ஸ்டூடியோ 9 சுரேஷ். விஜய் சேதுபதி தன்னிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க மறுப்பதாக கூறுகிறார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
நான் ஸ்டூடியோ 9 நிறுவனத்தை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். நல்ல படங்களை தேர்வு செய்து விநியோகித்து வருகிறேன். சலீம் படத்தை தயாரித்தேன். தற்போது பாலா படத்தில் நடித்து வருகிறேன். 2012ம் ஆண்டு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை வாங்கினேன். அப்போது அறிமுகமானார் விஜய் சேதுபதி. அப்போதே இவர் பெரிய நடிகராக வருவார் என்று தீர்மானித்து அவரை வைத்து ஒரு படம் எடுக்க நினைத்தேன். இதை அவரிடம் தெரிவித்தபோது அவரும் தனது நண்பர் ஆனந்த் முருகேசனை அறிமுகப்படுத்தி "இவர்தான் டைரக்டர், வசந்தகுமாரன் என்ற கதை வைத்திருக்கிறார் அதையே எடுக்கலாம்" என்றார்.
அதன் பிறகு விஜய்சேதுபதிக்கு ஒரு கோடி சம்பளம் பேசப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. 10 லட்சம் அட்வான்சாகவும் கொடுக்கப்பட்டது. இயக்குனர் ஆனந்த் குமார், நடிகை பிந்து மாதவி, வரலட்சுமி ஆகியோருக்கும் பணம் கொடுக்கப்பட்டது. தனியாக அலுவலகம் போடப்பட்டது.
அப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய்சேதுபதி அந்தப் படங்களை முடித்து விட்டு வருவதாக சொன்னார். அந்த படங்கள் ஹிட்டானதும் எனது படத்தில் நடிக்க தயக்கம் காட்டினார். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தவிர்த்தார். எனது படத்திற்கு ஒப்பந்தம் போட்டபிறகு 6 படங்களில் நடித்து முடித்து விட்டார். ஆனால் என் படத்தை கைவிட்டுவிட்டார். இதனால் எனக்கு இதுவரை 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதை கேட்டபோதுதான் நான் மிரட்டுவதாகவும், திட்டுவதாகவும் பொய்யான புகார்களை கூறியுள்ளார். ஒப்பந்தப்படி அவர் என் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன். அதில் நியாயம் கிடைக்காவிட்டால் விஜய்சேதுபதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்கிறார் சுரேஷ்.