'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'இதுதாண்டா போலீஸ்' புகழ் டாக்டர் ராஜசேகர் பாரதிராஜா இயக்கிய 'புதுமைப் பெண்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் தெலுங்கில் 'வந்தே மாதரம்' என்ற படம் மூலம் அறிமுகானார். விஜயசாந்தி நடித்த 'பிரதிகடனா' படம் மூலம் புகழ் பெற ஆரம்பித்தார்.
தெலுங்கில் வெளிவந்த 'அங்குசம்' படம் தமிழில் 'இதுதாண்டா போலீஸ்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்த டாக்டர் ராஜசேகருக்கு கடந்த சில வருடங்களாக வெற்றிப் படங்கள் அமையவில்லை. தற்போது, தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய 'சூது கவ்வும்' படத்தை 'கடம் கேங்' என்ற பெயரில் ரீமேக் செய்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
டாக்டர் ராஜசேகர் இனி, குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடிக்கத் தயார் என அறிவித்துள்ளார். 50 வயதைக் கடந்த நடிகர்கள் சிலருக்குத் திரையுலக வாழ்க்கையில் தொடர்ந்து ஹீரோக்களாக நடிக்கும் வாய்ப்பு அரிதாகவே அமைகிறது. அதைக் கருத்தில் கொண்டுதான் ராஜசேகர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
தெலுங்கில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராஜசேகர், நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்து பல வருடங்களாகிவிட்டது. தற்போது தமிழில், வில்லனாக நடிப்பதற்கு நடிகர்கள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் ஹிந்தியிலிருந்துதான் தமிழ் தெரியாத நடிகர்களை அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள். அப்படியிருக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகரான டாக்டர் ராஜசேகரை நமது தமிழ் இயக்குனர்கள் பயன்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.
ஏற்கெனவே, தமிழ் ஹீரோயின்களே பெரும்பாலும் இல்லாத நிலையில், வில்லன் நடிகர்களையாவது நமது மண்ணைச் சேர்ந்த நடிகர்களை பயன்படுத்தினால் தமிழ்ப் படங்களிலும் தமிழ் முகங்களைப் பார்க்கும் திருப்தி ரசிகர்களுக்குக் கிடைக்கும்.