ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கத்தி படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஆரம்பமாகிவிட்டது. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ஃபேன்டஸி திரைப்படமாக மிகப் பெரும் பொருட் செலவில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய், ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கிறார்கள். தமிழில் ஒரே நேரத்தில் ஹன்சிகா நடிக்கும் ஏழாவது படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. ஸ்ரீதேவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தையடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தை ராஜாராணி படத்தை இயக்கிய அட்லீ இயக்க உள்ளாராம். இந்தப் படத்திற்காக கதை விவாதம் ஏற்கெனவே நடந்து முடிந்து உள்ளது. நயன்தாராதான் அநேகமாக நாயகியாக நடிப்பார் என்கிறார்கள். அவரைப் படத்தில் நாயகியாக நடிக்க வைக்க இயக்குனர் அட்லீ பெரும் முயற்சி செய்து வருகிறாராம். ஆனால், விஜய்யுடன் நயன்தாரா ஜோடியாக நடித்த வில்லு படம் தோல்வியடைந்ததால், அது நடக்குமா எனத் தெரியவில்லை என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் தகவல் கசிந்துள்ளது. இதற்கு முன் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்த போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.