பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிபிராஜ் கதாநாயகனாக நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்ததால் அவரது மார்க்கெட் டவுன் ஆனது. அதனால் சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் கதை கேட்டு வந்த சிபிராஜ், பருத்திவீரன் பாணியில் கிராமத்து கதைகள் யாராவது வைத்திருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு வந்தார். ஆனால், சிட்டி லுக்கில் இருக்கும் அவரை நம்பி வில்லேஜ் கதையை எந்த இயக்குனர்களும் சொல்லவில்லை.
இருப்பினும் தான் எதிர்பார்த்தது போன்று ஒரு வித்தியாசமான கதை கிடைத்ததையடுத்து இப்போது நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில சிபிராஜ்தான் ஹீரோவா என்று கேட்டால், கதைதான் ஹீரோ என்கிறார்கள். அதிலும் அந்த படத்தில் நடித்திருக்கும் நாய்க்குத்தான் முதல் முக்கியத்துவமாம். அதோடு அந்த நாய்க்கு படத்தில் இரண்டு பாடல்கள்கூட உள்ளதாம்.
இதை நேற்று நாய்கள் ஜாக்கிரதை படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தபோது தெரிவித்த அப்பட நாயகியான அருந்ததி, எனக்குத்தான் ஒரு பாட்டுகூட இல்லை என்று ரொம்பவே பீல் பண்ணினார். ஆனபோதும், படத்தின் கதை என்னைச் சுற்றித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஆறுதலாக சொல்லிக்கொண்டார்.
ஆனால், அதையடுத்து பேசியவர்கள், கதாநாயகியை மையமாக வைத்து உருவான பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதன்பிறகு அவர்களது மார்க்கெட் எகிறியிருக்கிறது என்று பேசியவர்கள், உதாரணமாக நூறாவது நாள், வால்டர் வெற்றிவேல் ஆகிய படங்களை சுட்டிக்காட்டி அருந்ததியை உற்சாகப்படுத்தினர்.
மேலும்,. நேற்று நடந்த நாய்கள் ஜாக்கிரதை பிரஸ்மீட்டின்போது அப்படத்தில் நடித்துள்ள இத்தோ என்ற நாயும் ஒரு சேரில் பிரஸ்மீட் முடியும் வரை அமர்ந்திருந்தது குறிப்பிடததக்கது.