ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த வயதிலும் இளமை துடிப்போடு நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் பாபநாசம், உத்தமவில்லன் படங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. விஸ்வரூபம்-2 படத்தில் மட்டும் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், இந்த மூன்று படங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், திப்பு சுல்தானின் வாழ்க்கையை படமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசனே, திப்பு சுல்தான்-ஆக நடிக்கவும் செய்கிறாராம், கூடவே இப்படத்தை அவரே தயாரிக்கவும் இருப்பதாகவும், இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகளை கமல்ஹாசன் வெளியிடுவார் என தெரிகிறது.
கடந்தாண்டே, கமல்ஹாசன், திப்பு சுல்தானின் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிவித்தார் கமல். ஆனால் விஸ்வரூபம் என அடுத்தடுத்து கமல் பல படங்களில் பிஸியானதால் இப்படத்தை இயக்கமுடியவில்லை. இப்போது மீண்டும் திப்பு சுல்தானை கையில் எடுத்து இருக்கிறார். ஏற்கனவே, 'மருதநாயம்' எனும் சரித்திர கதையை படமாக்கி பின்னர் நிதி பிரச்னையினால் கிடப்பில் போட்டார் கமல், இப்போதும் அதை உயிர்பிக்கும் முயற்சியில் தொடர்ந்து இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு சரித்திர கதையை கையில் எடுத்து இருக்கிறார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.