பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
அரவான் படத்திற்கு பிறகு ஆதி நடிக்கும் படம் யாகவாராயினும் நாகாக்க, இந்தப் படம் தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் தயாராகிறது. ஆதியின் அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்குகிறார். அப்பா ரவிராஜா பினி செட்டி தயாரிக்கிறார். நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர பசுபதி, பிரகதி, கிட்டி, நரேன் உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு நடிகர்கள் அந்தந்த மொழி போர்ஷனில் நடிக்கிறார்கள். இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
படத்தை பற்றி ஆதி கூறியதாவது: நான் நடிக்கும் 6வது படம் இது. குறைவான படங்களே நடித்திருந்தாலும் நான் நடித்த படங்கள் அனைத்தும் ஒவ்வொரு வகையிலும் சிறப்பானவை. படங்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக நடித்த படங்கள் அல்ல. அரவான் பழந்தமிழ் கதை, மறந்தேன் மன்னித்தேன் கோதாவரி ஆற்று வெள்ளப்பெருக்கில் நடந்த உண்மை கதை, ஈரம் வித்தியாசமான த்ரில்லர் இப்படி நான் நடித்த படங்கள் ஏதோ ஒரு வகையில் ஸ்பெஷலாக இருக்கும்.
யாகாவாராயினும் நாகாக்க அப்படித்தான். ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். அதுதான் படத்தின் கதை. வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். தவறினால் வரும் விளைவையே படம் சொல்கிறது. ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருக்கும் நண்பர்களுக்குள் வாக்குவாதம் வந்து அங்கு சிந்தப்படும் வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதுதான் கதை.
அண்ணன் இயக்கத்தில் நடிப்பதால் எல்லாமே சுலபமாக இருந்தது. அவன் அமெரிக்காவில் டைரக்ஷன் கோர்செல்லாம் முடிச்சிட்டு வந்திருக்கான். அப்பாவும் எனக்காக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தை தயாரிக்கிறார். இது இன்றைக்கு எங்கள் குடும்ப படம். நாளைக்கு ரசிகர்களின் குடும்ப படமாக இருக்கும். வழக்கமான ஹீரோயிச கதையாக இல்லாமல் யதார்த்தமான மனிதர்களின் கதை. மிகைப்படுத்தலோ, போலியான பாசாங்கோ இல்லாமல் இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கும் என்கிறார் ஆதி.