Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வில்லன் வாழ்க்கை தான் சுகமானது: ஆனந்தராஜ் சொல்கிறார்!

11 நவ, 2014 - 13:54 IST
எழுத்தின் அளவு:

வில்லன் நடிகர் ஆனந்தராஜ் நேற்று (நவ 10) தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் அவர் கூறியதாவது: பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்து நடிப்பு ஆசையில் சென்னை வந்தேன். நடிப்பு கல்லூரியில் படித்து முடித்து விட்டு சினிமா வாய்ப்பு தேடினேன். ஒருவர் வாழும் ஆலயம், உரிமை கீதம் படங்களில் துணை வில்லனாக நடித்தேன்.


என் தங்கச்சி படிச்சவ படத்தில் வில்லனாக நடித்து பாப்புலர் ஆனேன். தென்னிந்திய மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் என்றைக்குமே வில்லனாக நடிப்பதில்தான் சுகம். ரசிகர் மன்றம் வைக்க மாட்டார்கள். விழாக்களுக்கு கூப்பிட மாட்டார்கள். நடித்தோமா ஜாலியாக இருந்தோமா என இருக்கலாம். எனது குடும்பத்தினருக்கும் நான் வில்லனாக நடிப்பதுதான் பிடிக்கும்.


முதன் முதலாக இந்திப் படத்தில் நடிக்கிறேன். பிரபுதேவாவை ஒரு டான்சராக இருந்த காலத்திலிருந்து தெரியும். அவருடன் நடித்திருக்கிறேன். அவரது இயக்கத்தில் நடித்தும் இருக்கிறேன். ஆக்ஷன் ஜாக்ஷன் படத்தில் வில்லன் கேரக்டருக்கு நான் பொறுத்தமாக இருப்பேன் என்பதை உணர்ந்து என்னை நடிக்க அழைத்தார். வில்லன்களுக்கே உரிய அதட்டல் மிரட்டல் இல்லாமல் இயல்பாக நடித்தால் போதும் என்று அவர் சொன்னார். அதையே செய்திருக்கிறேன்.


பாலிவுட்டில் எனக்கு கிடைத்திருக்கும் நண்பர் அஜய் தேவ்கான். பாங்காக்கில் சண்டை காட்சி எடுத்தபோது நான் விபத்துக்குள்ளாகி பலத்த காயம் அடைந்தேன். காயத்துடன் நடிக்க நான் முன்வந்தும் அஜய்தேவ்கான் நன்றாக ரெஸ்ட் எடுத்து வரும்படி அனுப்பி வைத்தார். நான் வரும் வரை காத்திருந்தார். அவரைப்போல எளிமையான ஹீரோவை நான் பார்த்ததில்லை. அடுத்து இந்தியில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா கிடைக்காதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆக்ஷன் ஜாக்சன் என் வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். என்றார் ஆனந்தராஜ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in