பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சினிமா உலகைப்பொறுத்தவரை ஒரு நடிகைக்கு திருமணமாகி விட்டால் அதன்பிறகு அவரை அக்கா, அண்ணி அல்லது அம்மா வேடங்களில் மட்டும்தான் நடிக்க வைப்பார்கள். உதாணரத்துக்கு, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக திகழ்ந்த நதியா, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாகத்தான் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
அவரையடுத்து, மீனாவும் இப்போது அம்மாவாகத்தான் நடித்து வருகிறார். அவரைப்போலவே ராதிகா, ரம்யா கிருஷ்ணன், அம்பிகா போன்ற மாஜி நடிகைகளெல்லாம் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகத்தான் சினிமாவில் ஆக்டு கொடுத்து வருகிறார்கள்.
ஆனால், நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்த பிறகு, டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபாலோ, தற்போது மலையாளத்தில் நடித்து வரும் மிலி என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்து வருகிறார். அதோடு, திருமண பந்தத்தினால் தனது உடல்கட்டு பெருத்து விடக்கூடாது என்பதற்காகவும், டயட்ஸ் கடைபிடித்து வரும் அமலாபால், இதன்பிறகும் நடிப்பை தொடர வேண்டும் என்பதற்காக புதிய கதைகளும் கேட்டு வருகிறாராம்.