தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் மீண்டும் இணைந்த 'கத்தி' திரைப்படம் தமிழில் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்தாலும், விமர்சன ரீதியாகவும் பலமாக விமர்சிக்கப்பட்டது. படத்தின் முன்பாதியில் எந்த வித முக்கியத்துவமும் இல்லாத காட்சிகள் நிறைந்திருந்தது. இடைவேளைக்குப் பின்னர்தான் படம் பார்க்கும்படியாக இருக்கிறது என பலதரப்பினரும் தெரிவித்தனர். கிளைமாக்ஸ் வசனக் காட்சியும், சில சண்டைக் காட்சிகளும்தான் படத்தைக் காப்பாற்றியது என்று பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதோடு, மொத்தமாக இரண்டே முக்கால் மணி நேரம் படம் நகர்வதும் சோர்வைத் தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தியேட்டர்காரர்கள் தெரிவித்த கருத்துக்கள், வினியோகஸ்தர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நன்றாக அறிந்த பின்னும் தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் நீளத்தைக் குறைக்கவேயில்லை.
முன்பெல்லாம் ஃபிலிமில் படம் திரையிடப்படும் போது ரசிகர்களின் கத்தலை வைத்து தியேட்டர்காரர்களே படத்தின் நீளத்தைக் குறைத்துவிடுவார்கள். ஆனால், தற்போது டிஜிட்டல் திரையீடு என்பதால் அதை தியேட்டர்காரர்களால் செய்ய முடியவில்லை. 'கத்தி' படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்பதே பொதுவான கருத்தாக எழுந்தது.
தற்போது 'கத்தி' படத்தை தெலுங்கில் வெளியிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தமிழ் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த விமர்சனத்தையும் கருத்தில் கொண்டு தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் படத்தின் நீளத்தை சுமார் அரை மணிநேரம் வரை குறைத்துவிட்டார்களாம். இதனால் படம் இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளதென டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் 'கத்தி' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தெலுங்கிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். வரும் 21ம் தேதியன்று இப்படம் தெலுங்கில் வெளியாகிறது.