ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1993ம் ஆண்டு பொன் விலங்கு படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித், தொடர்ந்து சிந்து நதிப்பூ, பாரதி கண்ணம்மா, நட்புக்காக, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மலையாள படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ள இவர், 1999ம் ஆண்டு நடிகை பிரியா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.சமீபத்தில் இவர்களுக்கு சென்னை குடும்பநல கோர்ட் விவாகரத்து அளித்தது. இந்நிலையில், நடிகர் ரஞ்சித், நடிகை ராகசுதாவை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனையடுத்து ரஞ்சித்திற்கும் ராகசுதாவிற்கும் இன்று சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் சின்ன மண்டபத்தில் நடைபெற்றது.
பல டிவி தொடர்களில் நடித்துள்ள ராகசுதா, 2005ம் ஆண்டு வெளிவந்த ஐயர் ஐ.பி.எஸ்., படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் சகோதரி கே.ஆர்.சாவித்ரியின் மகள். தங்கத்தின் தங்கம், தமிழ்ச்சி, ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.