இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், நாடக நடிகர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, சினிமா நடிகர்களை, நடிகர் சங்க பொதுச்செயலர் ராதாரவியும், துணைத் தலைவர் காளையும் விமர்சித்தது, மற்ற நடிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. நடவடிக்கை எடுக்கக்கோரி, சரத்குமாரிடம், நடிகர்கள் விஷால் மற்றும் நாசர் புகார் அளித்து உள்ளனர்.
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல், அடுத்த ஆண்டு ஜூனில் நடக்கிறது. இதில், மீண்டும் போட்டியிட, தற்போதைய சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலர் ராதாரவி ஆகியோர் விரும்புகின்றனர். சினிமா நடிகர்களை விட, நாடக நடிகர்கள் ஓட்டுகள் அதிகமாக இருப்பதால், அவர்களை கவர திட்டமிட்டுள்ளனர். இதில், திருச்சி, நாமக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையில் வசிக்கும், நாடக நடிகர்களை தங்கள் பக்கம் இழுக்க, ராதாரவி அணியினர் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சியில், நாடக நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ராதாரவி, சக நடிகர்களை விமர்சித்து உள்ளார். அதேபோல், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் காளையும், நடிகர்களை இழிவாகப் பேசியுள்ளார். இருவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமாருக்கு, நடிகர்கள் நாசர், விஷால் ஆகியோர், தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளனர். இது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாசர் கடிதத்தில் இருந்து...காளையன் பேசிய விவரம்:
*இந்த நாய்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றால், நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்த வேண்டும். அவர்களிடம் இருப்பதெல்லாம் வெறும் பணம்.
*சினிமா நடிகர்கள் எல்லாம், தயாரிப்பாளர்கள் முன் கையை கட்டி நின்று, வாய்ப்பை வாங்குகின்றனர். ஓரிரு படங்கள் ஓடி, கையில் பணம் சேர்ந்ததும், இவர்களுக்கு தலை கால் புரிவதில்லை.
ராதாரவி சொன்னது என்ன?
*அன்றைக்கு நாசரை போடா என்றேன். அவர்களின் திட்டம் என்னவென்றால் நாடக நடிகர்களுக்கு தனிச்சங்கம், சினிமாக்காரர்களுக்கு தனிச்சங்கம் என, இரண்டாக உருவாக்குவது தான்.
- நமது நிருபர் -