ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
இளையராஜாவைப் பொறுத்தவரை அவர் இசையமைக்கும் படங்களில் யார் யார் பாடல் எழுத வேண்டும் என்பதை அவர்தான் முடிவெடுப்பார். அதிலும் பெரும்பாலும் டியூன் போடும்போதே பல்லவியை எழுதி விடுவார். அதனால் அவர் படங்களில் பாடல் எழுதுபவர்களுக்கு சரணம் எழுதும் வாய்ப்புதான் கிடைக்கும்.
அந்தவகையில், மற்ற இசையமைப்பாளர்கள் யாருமே ஆதரிக்காத பாடலாசிரியர்களாகப் பார்த்து அவ்வப்போது பாடல் எழுத சான்ஸ் கொடுத்து வருகிறார் இளையராஜா. அப்படி ரஜினி நடித்த வேலைக்காரன் படத்தில், வேலை இலலாதவன்தான் வேல தெரிஞ்சவன்தான், தோட்டத்துல பாத்தி கட்டி போன்ற ஹிட் பாடல்களை எழுதிய மு.மேத்தாவுக்கு அவ்வப்போது தனது இசையில் பாடல் எழுத சான்ஸ் கொடுத்து வருகிறார் இளையராஜா.
சமீபத்தில் கூட, கிடா பூசாரி மகுடி என்ற படத்தின் மொத்த பாடல்களையும் முதலில் தானே எழுதுவதாக சொன்ன இளையராஜாவுக்கு பின்னர் போதிய நேரமில்லாததால், அந்த படத்தின் மொத்த பாடல்களையும் எழுதும் வாய்ப்பை மு.மேத்தாவுக்கே கொடுத்துள்ளாராம். அதேசமயம், தனக்கு பிடித்தமான சூழ்ல இருந்தால் தானே பின்னணியும் பாடி வரும் இளையராஜா, இந்த படத்தில் ஒரு உருக்கமான பாடலை பாடியிருக்கிறாராம்.