Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திக்குடன் நடிக்கும்போது பயமாக இருந்தது! - ஆடியோ விழாவில் தனுஷ் பேச்சு

10 நவ, 2014 - 08:51 IST
எழுத்தின் அளவு:

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் அனேகன். தனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்திக், ஐஸ்வர்யா தேவன், பாவனா, தலைவாசல் விஜய், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கே.வி,ஆனந்த் பேசுகையில், நான் இயக்கிய முதல் படம் கனா கண்டேன். ஆனால் அந்த படத்தின் கதையை கேட்பதற்கு முன்பு எழுத்தாளர்கள் சுபா இந்த அனேகன் கதையைத்தான் என்னிடம் சொன்னார்கள். ஆனால் இந்த கதையில் ஹீரோ நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டியதிருக்கிறது என்பதால் முதல் படத்திலேயே நான் பெரிய ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனால்தான் இந்த கதையை தள்ளி வைத்து விட்டு கனா கண்டேன் படத்தை இயக்கினேன்.


இந்த படத்தின் கதையை தனுசிடம் சொல்வதற்காக சந்தித்தபோது, பாதி கதையை கேட்டதுமே அவர் இந்த படத்தில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார். அவரது ஈடுபாடு, உற்சாகம் எனக்கு பெரிய தெம்பை கொடுத்தது.


மேலும், இதுவரை நான் இயக்கிய கதைகளில் காதல் இருந்தாலும் கதைகளின் சூழல் வேறு திசைகளில் செல்லும். ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையில் உருவாகியிருக்கிறது. இதுவரை எந்த படத்திலும நடிக்காத அளவுக்கு ரொமான்ஸ் காட்சியில் நடித்திருக்கிறார் தனுஷ். 4 ரோல்களில் ஒன்றுக்கொன்று எந்தவித தொடர்பும் இல்லாத வகையில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். அதோடு நான் எந்த மாதிரி நடிக்கச்சொன்னாலும் ஏன் எதற்கு என்று கேட்காமல் நடித்தார்.


முக்கியமாக தண்ணீருக்குள் 3 நிமிடம் மூச்சை அடக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொன்னபோது, சிறிதும் தயங்காமல் நடித்தார். அதேபோல் 60 அடி உயரத்தில் தொங்க வேண்டும் என்று சொன்னபோதும், சிறிதும் முகம் சுழிக்காமல் அடுத்த நிமிடமே அந்த காட்சியில் நடிக்க தயாரானார். அந்த வகையில், எந்த காட்சிகளில் எல்லாம் நடிக்க தனுஷ் ஒத்துக்கொள்ள மாட்டாரோ என்று நான் நினைத்தேனோ அந்த காட்சிகளில் எல்லாம் அவர் உடனடியாக நடித்துக்கொடுத்தார்.


மேலும், இந்த கதை 1982,1987 காலகட்டங்களில் நடக்கிறது. அதோடு, பூர்வஜென்ம நிகழ்வுகளும் உள்ளது. அதோடு, இதுவரை டீசன்டாகவே இசையமைத்து வந்த ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்தில் இடம்பெறும பேட்டை பாடலை இறங்கி அடித்திருக்கிறார். டங்கமாரி என்று தொடங்கும் அந்த பாடல் உள்பட அனைத்து பாடல்களையுமே ஒவ்வொரு பாணியில் இசையமைத்து நல்லதொரு ஆல்பத்தை தந்திருக்கிறார் என்றார்.


தனுஷ் பேசுகையில், என்னை வைத்து பிரமாண்ட படமெடுத்த முதல் டைரக்டர் கே.வி.ஆனந்த்தான். ஒரு பழைய பேண்ட், சட்டை, ஹவாய் சப்பல் இதுதான் பெரும்பாலான படங்களில் எனது கெட்டப் இருக்கும். ஆனால் இந்த படத்தில் விதவிதமான காஸ்டியூம்களில் என்னை நடிக்க வைத்திருக்கிறார்.


மேலும், இந்த படத்தில் நடிக்க வந்தபோதுதான் கார்த்திக் சாரை முதன்முதலாக சந்தித்தேன்.அவரிடம் நெருங்கிப்பழக தயங்கினேன். ஆனால் அவர் வந்ததுமே என்னை அருகில் இழுத்து சகஜமாக பேசத் தொடங்கினார். அதோடு, அவருடன் நடிப்பதற்கு ரொம்ப பயமாக இருந்தது. காம்பினேஷன் காட்சிகளில் கொஞ்சம் விட்டாலும் அவர் என்னை ஓவர்டேக் செய்து விடுவது போலவே இருந்தது. அதனால் ரொம்ப ஜாக்கிரதையாகவே அவருடன் நடித்தேன்.


அது மட்டுமின்றி டப்பிங்கிலும் ஆங்காங்கே நிறைய பேசி வைத்திருந்தார். அதனால் நான் பேசுவதற்கு கேப் கிடைக்காமலும் கஷ்டப்பட்டேன். அந்த அளவுக்கு சீனியர் நடிகர் அவர் தனது அனுபவத்தைக் காட்டியிருந்தார். அவருடன் நடித்தது எனக்கு ரொம்ப நல்ல அனுபவமாக இருந்தது என்று சொன்ன தனுஷ், நான் ஷமிதாப் படத்தில் நடிப்பதற்கும் கே.வி.ஆனந்த்தான் முக்கிய காரணம் என்று சொன்னார்.


அதாவது, நான் அனேகனில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், ஷமிதாப் படம் வந்தது. கதையைக் கேட்டதுமே ரொம்ப பிடித்து விட்டது. ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் என்னிடம் கால்சீட் இலலை. அந்த தேதியை அனேகன் படத்திற்காக கொடுத்திருந்தேன். அதனால் அதையடுத்து கே.வி.ஆனந்திடம், விசயத்தை சொன்னபோது, ஷமிதாப் படத்தை விட வேண்டாம் நடியுங்கள் என்று சொல்லி கால்சீட்டை அட்ஜஸட் பண்ணிக்கொண்டார். அதனால்தான் ஷமிதாப்பில் கமிட்டாகி நடித்தேன். ஆக, கே.வி.ஆனந்த் மட்டும் அனேகன் படத்துக்கு கொடுத்த கால்சீட்டில் எந்த மாற்றமும் செய்ய மாட்டேன் என்று சொல்லியிருந்தால் கண்டிப்பாக நான் ஷமிதாப் படத்தில் நடித்திருக்க சாத்தியமே இல்லை என்றார் தனுஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in