'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சேட்டை படத்திற்கு பிறகு ஆர்யாவுடன் இணைந்து ஹன்சிகா நடித்துள்ள படம் மீகாமன். இந்த படத்தை தடையறத்தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஹன்சிகா இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படும் நிலையில், ஒரு பாடல் காட்சியில் நடித்தபோதே அவர் அழுது விட்டார் என்று அப்படக்குழுவினரே தெரிவித்தனர்.
ஆனால், அதற்கு காரணம், அவரை குட்டை பாவாடை காஸ்டியூம் அணிய வைத்து கொளுத்தும் வெயிலில் படமாக்கியதாக ஒரு செய்தி வெளியானது. அதுகுறித்து, அப்படத்தின் டைரக்டர் மகிழ்திருமேனியிடம் கேட்டபோது, மற்ற படங்களில் நடிக்காத அளவுக்கு ஹன்சிகாவை அதிகமாக தோலுரிக்கவில்லை. சென்சார் கத்தரி வைத்து சேதப்படுத்தாத அளவுக்குத்தான் நடிக்க வைத்திருக்கிறேன் என்கிறார்.
அப்படியென்றால் அந்த காட்சியில் நடித்தபோது ஹன்சிகா கண்கலங்கியதேன்? என்று கேட்டால், அவர் தன்னை ஆபாசமாக சித்தரித்து விட்டதாக கலங்கவில்லை. அவர் நடித்துள்ள கேரக்டரினால் தனது ஹீரோயின் இமேஜ் பாதிக்கப்படுமோ என்றுதான் கலங்கினார். ஆனால் அதை அவரிடம் முறையாக விளக்கிய பிறகு அதன் வேல்யூவை புரிந்து கொண்டார். மீகாமன் திரைக்கு வரும்போது ஹன்சிகாவின் கேரக்டருக்கு கதையில் உள்ள முக்கியத்துவம் தெரியும். அப்போது அவரே சந்தோசப்படுவார் என்கிறார் மகிழ்திருமேனி.