இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சல்மான் கானின் பாலிய நண்பரான சுக்கி பாண்டேவின் சகோதரர் சிக்கி பாண்டே. இவர்க தற்போது சல்மான் மீதான போதையில் கார் ஓட்டிய வழக்கில் புதிய திருப்பமாக சல்மானுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் சிக்கி அளித்துள்ள சாட்சியத்தில், நான் சிறுவழதில் இருந்தே பந்திராவில் தான் இருந்து வருகிறேன். அந்த விபத்து நடைபெற்ற அன்று என் வாட்ச்மேன் என்னிடம் வந்து, சல்மானின் கார் விபத்துக்குள்ளாகி விட்டதாக தெரிவித்தார். உடனே நான் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தேன். அப்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வீட்டில் இருந்தனர். என்னை பார்த்ததும் அதிர்ச்சியில் இருந்த சல்மான் ஓடி வந்து என்னை கட்டி அணைத்துக் கொண்டார். அப்போது குடித்திருக்கவில்லை. குடித்த வாசனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் சல்மான் மீதான வழக்கு விசாரணையில் கோர்ட் அறிவித்திருந்த தேதியில் சல்மானால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை. அவரது சகோதரியின் திருமண ஏற்பாடுகளை செய்து வருவதால் அவரால் ஆஜராக முடியவில்லை. இதனால் நவம்பர் 24 மற்றும் 25 தேதி அவர் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் சிக்கி இப்போது அளித்துள்ள வாக்குமூலம் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.