மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாணா காத்தாடி படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதன்பிறகு தமிழ், தெலுங்கு என்று இதுவரை 25 படங்களில் நடித்து விட்டார். ஆனபோதும், தமிழில் அவர் நடித்த அஞ்சான், கத்தி படங்களுக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து அதிகப்படியான விமர்சனங்கள் வந்துள்ளதாம். காரணம், தெலுங்கில் நடித்த படங்களைப் பொறுத்தவரை குறைவான வசன காட்சிகளில, அதிகமான பாடல் காட்சிகள் என்றுதான் நடித்திருக்கிறாராம். அதனால் அவரது நடனத்திற்கு மட்டுமே ரசிகர்கள் லைக் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், தமிழில் நடித்த படங்களில் அவருக்கு கூடுதலான வசன காட்சிகளும் கொடுக்கப்பட்டதால் பெருவாரியான ரசிகர்கள் சமந்தாவின் நடிப்பு குறித்து உச் கொட்டி வருகிறார்களாம். அந்த வகையில், அஞ்சான் வெற்றி பெறாதபோதும் சமந்தாவின் பிகினி கலந்த நடிப்புக்கு இளவட்ட ரசிகர்கள் ஏகப்பட்ட மார்க் கொடுத்து வருகிறார்களாம்.
அதிலும் விஜய்யுடன் நடித்துள்ள கத்தி படத்தில் அவரது நடிப்பையும், விஜயுடனான ஜோடிப் பொருத்தத்தையும் பெருமையாக சொல்லி கொண்டாடுகிறார்களாம். அந்த வகையில், சமந்தாவின் இணையதள பக்கத்திற்குள் செல்லும் விஜய் ரசிகர்கள், இந்த ஒரு படத்தோடு நிறுத்திக் கொள்ளக்கூடாது. எங்கள் தளபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் சொல்லி சமந்தாவை உசுப்பேற்றி விடுகிறார்களாம். அதனால் விஜய் நடிக்கும் மாரீசன் படத்துக்கு ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரும், அட்லி இயக்கும் படத்திற்கு நயன்தாராவும் கமிட்டாகி விட்ட நிலையில், அதற்கடுத்து சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிப்பதற்கான முயற்சியை இப்போதே முடுக்கி விட்டிருக்கிறாராம் சமந்தா.