'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
தனது பிறந்தநாளில் குப்பை அள்ளியதை பெருமையாக நினைப்பதாக கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். பிரதமர் நரேந்திர மோடி கிளீன் இந்தியா எனும் திட்டத்தை அக்டோபர் 2ம் தேதி துவக்கி வைத்தார். இதில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன், சல்மான் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதன்படி கமலும் இந்த திட்டத்தில் சேருவதாக சொன்னார். அவர் சொன்னபடி இன்று கமல் செயல்பட்டார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 60வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளில் மோடியின் கிளீன் இந்தியா திட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டார். சென்னை, தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை தனது ரசிகர்கள் முன்னிலையில் சுத்தம் செய்யும் பணியை கமல் துவக்கி வைத்தார். மேலும் இந்ததிட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஏரியை சுத்தம் செய்வது என்பது ஒரேநாளில் முடிகிற வேலை கிடையாது. இது ஒரு தொடர் வேலை. ஏரி என்பது பொதுமக்களின் சொத்து, அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிறந்தநாளில் எல்லோரும் கேக் வெட்டுவார்கள், நான் இங்கு குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இதை பெருமையாக நினைக்கிறேன். என் நாடு சுத்தமாக நான் இதில் பங்கேற்பதால் என் பிறந்தநாள் இன்னும் மேலும் சிறப்படையும் என்று நினைக்கிறேன்.
மக்களின் அன்பு தான் சாதனை, இத்தனை கேமராக்கள் என்னை திரும்பி பார்க்கிறது. கேமராவில் முகமில்லாமல் இருந்த எனக்கு இன்று இத்தனை கேமராக்கள், வீடியோக்கள் எல்லாம் படம் பிடிக்கிறது இவ்வளவு பேர் என்னை அன்புடன் பார்க்கிறார்கள், வாழ்த்து சொல்கிறார்கள், நான் இன்று ஒருவன் இருக்கிறேன் என்று என்னை அடையாளம் காட்டி எனக்கு அறிமுகம் தந்த தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினார்.
அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல், ஓட்டு போடுகிற எல்லோரும் அரசியலில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். நான் உள்ளிட்ட மக்களாகிய எல்லோரும் ஓட்டுப்போட்டு அவர்களை பிரதிநிதியாக்கி உள்ளோம், அந்தவகையில் நானும் அரசியலில் சம்பந்தப்பட்டுள்ளேன் என்றார். ரஜினிக்கு அரசியல் கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்துள்ளது, அதுப்பற்றிய கேள்விக்கு பதில் அளித்த எனக்கு அழைப்பு வரும் போது அதைப்பற்றி நான் பேசலாம், இன்னொருவருக்கு வந்த அழைப்பை என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அப்பகுதி பொதுமக்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.