டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2007ல் கற்றது தமிழ் படத்தில் இருந்து தனது தமிழ் சினிமா பயணத்தை தொடங்கியவர் அஞ்சலி. அதன்பிறகு நடித்த அங்காடித்தெரு படம் அவரை பிரபலப்படுத்தியது. ரெட்டைச்சுழி, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், சேட்டை என பல படங்களில் நடித்தார். ஆனால் இதற்கு பின்னணியில் அஞ்சலியின் சித்தி பாரதிதேவிதான் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.
ஆனால், ஒரு கட்டத்தில் அஞ்சலி-பாரதி தேவிக்கிடையே குடும்பச்சண்டை ஏற்பட்டு, பின்னர் ஆந்திராவில் குடியேறி விட்டார் அஞ்சலி. இப்போது அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை கூட இலலையாம்.
இந்த நிலையில், அஞ்சலியை தென்னிந்திய சினிமாவில் பெரிய நடிகையாக உருவாக்கிய நான் அடுத்து இன்னொரு அஞ்சலியை உருவாக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு இப்போது ஆந்திராவில் இருந்து கிட்டத்தட்ட அஞ்சலி சாயலிலேயே பிரியங்கா என்ற இன்னொரு இளவட்ட நடிகையை சென்னைக்கு இறக்குமதி செய்திருக்கிறார் பாரதிதேவி.
தற்போது அவரை போட்டோசெஷன் எடுத்து தனக்கு நெருக்கமான கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்திருக்கும் பாரதிதேவி, அஞ்சலியை ஆரம்பத்தில் அறிமுகம் செய்தபோது, கணடிப்பாக கிளாமராக நடிக்க மாட்டார் என்ற பின்குறிப்பு எழுதி விட்டார். ஆனால், இந்த பிரியங்கா விசயத்தில் அப்படி சொல்லவில்லை. கதைக்கு தேவையானபடி எப்படி வேண்டுமானாலும் நடிப்பார் என்று சொல்லி டைரக்டர்களின் கவனத்தை பிரியங்கா மீது விழ வைததிருக்கிறார். குறிப்பாக, அஞ்சலி அடுத்தடுத்து நடிக்க பேச்சுவார்த்தை நடத்தும் கம்பெனிகளாகப் பார்த்து இந்த பிரியங்காவை அழைத்து சென்று சான்ஸ் கேட்கிறாராம் பாரதிதேவி.
சேதியறிந்து அதிர்சசியடைந்திருக்கிறாராம் அஞ்சலி.