ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாட்டில், பரவலாக நடந்து வரும் பாலியல் குற்றங்களுக்கு, பலரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வரும் நிலையில், 'ஆடுகளம்' டாப்சியும் கருத்தை பதிவு செய்துள்ளார். 'பாலியல் குற்றம் புரிவதே கொடுமையானது. ஆனால், தற்போது சிறுமியரும், அந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதை, ஒரு போதும் மன்னிக்கவும், பொறுக்கவும் முடியாது. பாலியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையைப் பார்த்து, மற்றவர்கள் அதை செய்ய பயப்பட வேண்டும். எந்த காரணம் கொண்டும், அவர்களை வெளியே விட்டுவிடக் கூடாது' என்று கூறியுள்ளார். டாப்சியின் ஆவேசத்தை பார்த்து, 'அம்மாடியோவ், இந்த அழகு பொம்மைக்குள் இவ்வளவு ஆவேசமா?' என, சக கலைஞர்கள் ஆச்சர்யப்படுகின்றனர்.