ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பானு என்ற பெண் ஒப்பனை கலைஞர் புதிதாக பணிக்கு வந்தார். ஹாலிவுட்டில் படித்து விட்டு வந்த அவரை இங்குள்ள முன்னணி ஹீரோக்கள், ஹீரோயின்கள் விரும்பி அழைத்தார்கள். ஆனால் அவரை இங்குள்ள ஒப்பனை கலைஞர்கள் சங்கம் சேர்க்க மறுத்ததோடு. அவர் பணி செய்யக்கூடாது என்றது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு பின்னர் பானு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இதேபோன்ற ஒரு சூழ்நிலை பாலிவுட்டிலும் ஏற்பட்டது. சாரு குரானா என்ற பெண் (அருகில் உள்ள படம்) ஹாலிவுட்டில் படித்து விட்டு மும்பைக்கு வந்து இந்திப் படங்களில் பணியாற்றத் தொடங்கினார். அதற்கு இந்திப்பட உலக ஒப்பனை கலைஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பெண்களை பணிக்கு சேர்க்க கூடாது என்று 60 வருடங்களுக்கு முன்பே அந்த சங்கத்தில் விதிமுறை வைத்திருக்கிறார்கள்.
இதை எதிர்த்து சாரு குரானா உள்ளிட்ட சில பெண் ஒப்பனை கலைஞர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் "எந்த தொழிலையும் பாலியல் ரீதியாக பிரிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. பெண்கள் ஒப்பனை கலைஞர்களாக பணியாற்றக்கூடாது என்ற சங்க விதியை உடனே நீக்க வேண்டும். பெண்கள் ஒப்பனை கலைஞர்களாக பணியாற்றுவதை யாரும் தடைசெய்யக்கூடாது. கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் திரைப்படத்துறையில் பணிபுரியும் அத்தனை பெண் ஒப்பனை கலைஞர்களுக்கும் தடைவிதித்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.