தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமா வட்டாரத்தில் விமலை பற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் ஒரு விஷயத்தில் அவரை எல்லோரும் பாராட்டுவார்கள். அது அவர் தயாரிப்பாளரின் இயக்குனர் என்பது. தான் நடித்த பல படங்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார். உதவி என்று கேட்டவர்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். ஜன்னலோரம் படம் பணம் இல்லாமல் வெளியாவதில் சிக்கல் இருந்தபோது தனக்கு வரவேண்டிய சம்பளத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதேபோல மஞ்சப்பை படத்திற்கும் உதவினார்.
"மாத சம்பளத்துக்கு வேலை பார்த்தவன் நான். ஏதோ நம்ம அதிர்ஷடம் சினிமால நடிக்கிறோம், சம்பாதிக்கிறோம். நிறைய பணத்தை வச்சிக்கிட்டு என்ன பண்ணப்போறோம். எத்தனையோ படங்கள்ல பேசினபடி சம்பளம் வராது. அவுங்களால முடிஞ்சா குடுத்திடுவாங்க. முடியாமல்தானே தரலைன்னு விட்டுட்டு அடுத்த படத்துக்கு போயிடுவேன். இதையெல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு விளம்பரப்படுத்திக்கிட்டா இருக்க முடியம்.
ஆனா இப்போ கொஞ்சம் சம்பள விஷயத்துல உஷாரா இருக்கேன். நம்மளோட பெருந்தன்மைய சிலர் தப்பா யூஸ் பண்ணிக்கிறாங்களோன்னு தோணிச்சு உஷாராயிட்டேன். என்னோட படம் ஓடிச்சின்னா நிறைய சம்பளம் தருவாங்க. ஓடலைன்னா குறைச்சிக்குவாங்க. இதுல நாம போயி என்ன இவ்வளவு கொடுங்க, அவ்வளவு கொடுங்கன்னு கேக்குறது. எவ்வளவு கொடுக்கணும்னு அவிங்களுக்கே தெரியும்" என்கிறார் விமல்.