‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பொன்விலங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஞ்சித். சிந்துநதி பூ, பாரதி கண்ணம்மா, சேர சோழ பாண்டியன், தேசிய கீதம், மறுமலர்ச்சி, நட்புக்காக, புதுமை பித்தன் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார், சில படங்களை தயாரித்து இயக்கி இருக்கிறார்.
1999ம் ஆண்டு நடிகை ப்ரியா ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆதித்யா, ஆகாஷ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கோர்ட் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.
இந்த நிலையில் ரஞ்சித் மாஜி ஹீரோயின் ராகசுதாவை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகசுதா நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை கே.ஆர்.சாவித்ரியின் மகள். தங்கதின் தங்கம், தமிழச்சி, ஜல்லிகட்டு காளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிரபல சாமியார் பிரேமானந்தாவின் பக்தை. தீவிர ஆன்மீக சிந்தனை உள்ளவர்.
இந்த திருமணம் குறித்து ரஞ்சித் கூறும்போது "ராகசுதாவின் மூலம் எனக்கு ஆன்மீக வழியும், மன அமைதியும் கிடைத்தது. நண்பர்களாகத்தான் இருந்தோம் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறோம். வருகிற 10ந் தேதி எளிய முறையில் எங்கள் திருமணம் நடக்க இருக்கிறது" என்றார் ரஞ்சித்.