டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸ் கூடவே இருக்கும் சிறுவனாக நடித்து இருப்பவர் சங்கர். இதற்கு முன்பு வடிவேலுவுடன் நிறைய படங்களில் நடித்து வால்தனம் செய்த சங்கர், இப்படத்தின் மூலம் வில்லத்தனம், காமெடி, சென்டிமென்ட் என பன்முகத்தை காட்டியிருக்கிறார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது ஒரு டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சங்கர், கருணாஸ் தனக்கு செய்த உதவியை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என்று உருக்கமாக கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், காமெடி காட்சிகளில் மட்டுமே நடித்து வந்த என்னை சென்டிமெண்ட் காட்சிகளிலும் நடிக்க வைத்து, நல்ல வாய்ப்பைக் கொடுத்த கருணாஸ், இயக்குநர் பி.ராம்நாத் சாருக்கும் நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறேன். கருணாஸ் என்றைக்குமே எனக்கு அண்ணையாதான். எனக்கு முதல் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் டைரக்டர் பாக்யராஜ் சார். அவருக்குத்தான் முதல் நன்றி சொல்லணும், என்று கூறியுள்ளர்.
குள்ள உருவமும் குறுகுறு பார்வையும் கொண்ட சங்கரின் சொந்த ஊர் மதுரை திருமங்கலம் ஆகும். பள்ளியில் படிக்கும்போதே மேடை நாடகம், டான்ஸ் போன்றவற்றில் ஆர்வம் காட்டிய அவர் சினிமா ஆசையில் சென்னை வந்து, டைரக்டர் பாக்யராஜிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார். இப்போதைக்கு படம் பண்ணவில்லை என்று கூறிய பாக்யராஜ், தனது அலுவலகத்தில் வேலை கொடுத்து, தங்குவதற்கு இடமும் கொடுத்திருக்கிறார். சில காலம் கழித்து லிங்குசாமியின் ஜீ படத்தில் நடிக்க பாக்யராஜ் வாய்ப்பு பெற்று கொடுத்திருக்கிறார்.
சினிமாவிற்குள் நுழைந்த கதையை உருக்கமாக நினைவுகூறும் சங்கர், குணச்சித்திர வேடங்களில் நடிக்க தயாராக இருக்கிறாராம். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் இவரது நடிப்பை பார்த்து பல இயக்குனர்களிடம் இருந்து பாராட்டுக்களும், வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறதாம்.