பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ். ஒரு பாட்டுக்கு ஆட்டம், கவர்ச்சி நடிப்பு என கலக்கிக் கொண்டிருப்பவர். கிக் படத்திற்கு பிறகு ஜாக்குலின் கேரியர் டாப் கீயரில் ஏறியது. டெபினேஷன் என்ற ஹாலிவுட் படம் வரைக்கும் சென்று விட்டார். கிக் படத்திற்கு பிறகு சல்மான்கான், ஜாக்குலினுக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் என்பது வரை கிசுகிசுவும் பரவிக்கிடக்கிறது. ஆனால் "சல்மான்கான் எனக்கு வீடு வாங்கித் தரவில்லை நானே சொந்தமாக ஒரு தீவை வாங்கியிருக்கிறேன்" என்கிறார் ஜாக்குலின்.
அவர் கூறியிருப்பதாவது: சல்மான்கான் எனக்கு மும்பையில் எனக்கு பங்களா வாங்கி கொடுத்ததாக சொல்கிறார்கள். அவர் வாங்கிக் கொடுக்கவில்லை. வாங்கிக் கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக் கொள்வேன். மும்பையில் வீடு வாங்குவது தொடர்பாக சில ஆலோசனைகளை அவரிடம் கேட்டேன். அவ்வளவுதான் அதற்கு கண் காது மூக்கு வைத்து பரப்பி விட்டார்கள். ஆனால் விரைவில் வீடு வாங்குவேன்.
எனது பூர்வீகம் இலங்கை. அங்கு ஒரு இடம் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஒரு சிறிய தீவு நல்ல விலைக்கு வந்தது வாங்கி விட்டேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அங்கு சென்று விடுவேன். அமைதியும், சந்தோஷமும் அங்கு கிடைக்கும். என்னுடைய காதலர் சாஜித்திடமிருந்து பிரிந்து விட்டது உண்மைதான். அவரை மறக்க முடியாமல் தவிக்கிறேன் என்பதும் உண்மைதான். ஆனால் நான் உண்மையான அன்பு வைத்திருந்ததை போல அவர் என் மீது உண்மையான அன்பு வைத்திருக்கவில்லை. விரைவில் மறந்து விடுவேன். என்கிறார் ஜாக்குலின்.