டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சந்தானம், பவர்ஸ்டார், சேது ஆகியோர் இணைந்து நடித்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. மூன்று பேர் ஹீரோக்களாக நடித்த இந்த படத்தில் ஒரேயொரு நாயகியாக நடித்தவர்தான் விசாகா சிங். படம் சூப்பர் ஹிட்டானதால், அதையடுத்து, தமிழில் தனக்கு மெகா ஹீரோக்களின் படங்கள் புக்காகும் என்று ரொம்பவே எதிர்பார்த்தார் விசாகாசிங். ஆனால், அதையடுத்தும் அதே சந்தானம்-சேது நடித்த வாலிபராஜா என்ற படம் மட்டுமே கிடைத்தது.
ஆனால், அந்த படமும் அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில், இன்னமும் திரைக்கு வருவதற்கான அறிகுறிகளே இல்லை. அதனால் இந்த படம் வந்தாலாவது ஒரு சேஞ்ச் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த விசாகாவுக்கு மீண்டும் ஏமாற்றம்தான். இந்த நிலையில், விமல் -ப்ரியாஆனந்துடன் இணைந்து விசாகா நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் நவம்பர் 7-ந்தேதி திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இருப்பினும், இந்த படம் திரைக்கு வருவதினால் விசாகாசிங்கிற்கு பெரிய மகிழ்ச்சி ஒன்றும் இல்லையாம். காரணம், இந்த படத்தில் ப்ரியா ஆனந்த்தான் மெயின் ஹீரோயினியாக நடித்திருக்கிறாராம். விசாகாவிற்கு ஒரு சிறிய வேடம்தான். அதைகூட ஒரு கேரக்டர் என்றுதான் சொல்கிறார்கள். அதனால் இந்த படம் வந்து தனது ஹீரோயின் இமேஜை காலி பண்ணி விடுமோ என்று உள்ளூர கலங்கிப் போயிருக்கிறார் லட்டு விசாகாசிங்.