டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திரையுலகில் இப்போது ஒரு புது டிரெண்ட் ஒன்று உருவாகி வருகிறது. அதாவது மற்றவர்களைப் புகழ்ந்து பேசியும், பாராட்டிப் பேசியும், அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லியும் 'ஐஸ்' வைத்து பலர் வாய்ப்புத் தேடி வருகிறார்களாம். இதை முன்னணிக்கு வந்து கொண்டிருப்பவர்களும், ஏன் முன்னணிக்கே வந்து விட்டவர்களும் கூடச் செய்துவது தான் ஆச்சரியமாக உள்ளது என திரையுலகில் உள்ள சிலரே நம்மிடம் தெரிவித்தார்கள்.
முன்பெல்லாம் விழா மேடையில்தான் மற்றவர்களைப் புகழ்ந்து பேசுவது நடக்கும், அது இப்போதும் நடந்துதான் வருகிறது. ஆனால், அவை மீடியாக்களில் அதிகமாக வெளியாவதில்லை. முக்கியமானவர்கள் பேசுவது மட்டும்தான் செய்திகளாகவும் வெளிவரும். இப்போது அப்படிப்பட்டவர்களுக்கு எளிதான வழி ஒன்று கிடைத்துவிட்டது. அவை சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் ஒருவர் மற்றவர்களைப் பாராட்டித் தள்ளுவது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன.
அதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்தைக் கூறலாம். அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு இரு தினங்களுக்கு முன்பு 'என்னை அறிந்தால்' என தலைப்பை அறிவித்தார்கள். கடந்த இரு தினங்களாக அந்தத் தலைப்பை திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்தி வருகிறார்கள். ஆனால், அஜித் ரசிகர்களே கூட இது என்ன தலைப்பு, ஏதோ ஒரு நாவலுக்கு வைப்பது போலிருக்கிறதே என விமர்சித்து வருகிறார்கள். நடுநிலை சினிமா ரசிகர்கள் பலரும் அந்த டைட்டிலைக் கிண்டலடித்தும் வருகிறார்கள்.
அப்படியிருக்க சும்மாவே எதற்குப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இப்படி அந்த டைட்டிலைப் பற்றி பாராட்டி பேசும் போது மீடியாக்கள் அவற்றை செய்திகளாக வெளியிடுகிறார்கள். அப்படி யார் யாரெல்லாம் அந்த டைட்டிலைப் பாராட்டுகிறார்களோ, அவர்களை அஜித் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு புதிதாக ரசிகர்களும் கிடைத்து விடுகிறார்கள், அவர்களது சமூக வலைத்தளங்களில் புதிதாக சேருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகக் கிடைத்து விடுகிறது.
அடுத்து, சம்பந்தப்பட்ட நாயகன், இயக்குனர் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அதன் மூலம் அவர்களது அடுத்த படங்களில் நமக்கும் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடும் என்று நம்புகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் அஜித், விஜய் இவர்களிருவரின் படங்களில் பணிபுரிய பலரும் ஆசைப்பட்டு வருகிறார்கள். அவர்கள் படங்களில் நடிப்பதன் மூலமோ, பாடல்களை எழுதுவதன் மூலமோ, இசையமைப்பதன் மூலமோ சீக்கிரமே புகழ் பெற்று விடலாம் என்றும் எண்ணுகிறார்களாம். ஒரு சிலர் இதை வாடிக்கையாகவே வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். திறமையினால் பெறும் வெற்றியே நிரந்தரமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற துடிப்பே பலரிடமும் காணப்படுகிறது. இதற்குத் திரையுலகம் மட்டும் விதிவிலக்கல்ல....