இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்திய பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி அதில் திரையுலக நட்சத்திரங்களை பங்கேற்க அழைத்திருக்கிறார். அவர் நேரடியாக அழைத்த நட்சத்திரங்களில் கமலஹாசனும் ஒருவர். அதனை ஏற்றுக் கொண்ட கமல் 90 லட்சம் பேரை தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்க்க இருப்பதாக அறிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக தனது பிறந்த நாளான வருகிற 7ந் தேதி அன்று நீர்நிலைகள் தூய்மைப் படுத்தும் இயக்கத்தை தொடங்குகிறார். தாம்பரம், வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள ராஜாகீழ்ப்பாக்கம் மாதம்பாக்கம் ஏரியில் இந்த பணியினை துவக்கி வைக்கிறார்.
அன்று மாலை சென்னை தூர்தர்ஷன் எதிரில் உள்ள அண்ணா அரங்கில் தூய்மை இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தனது நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கலந்து பேசுகிறார். பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவது பற்றி விளக்கி கூறுகிறார். இந்த நிகழ்ச்சியில் திரளான கமல் ரசிகர்களும், திரையுலகினரும் கலந்து கொள்கிறார்கள்.