தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2010க்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யாராய், 4 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தற்போது சஞ்சய்குப்தா இயக்கும் ஜாஸ்பா என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். சபானா ஆஸ்மி, இர்பான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும இந்த படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறாராம் ஐஸ்வர்யாராய்.
மேலும், ஐந்து முறை தேசிய விருது வாங்கியிருக்கும் சபானா ஆஸ்மியுடன் எதிரும் புதிருமான வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராய், இனிமேல் தானும் நல்லதொரு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாக நிலைக்க வேண்டும் என்பதற்காக, அவருடன் போட்டி போட்டு நடிக்க வேண்டும் என்று தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.
அதனால் இதுவரை ஐஸ்வர்யாராய் நடித்த படங்களைப் போல் இல்லாமல் இந்த படத்தில் அவரிடமிருந்து மெச்சூரிட்டியான நடிப்பை எதிர்பார்க்கிறாராம் இயக்குனர் சஞ்சய்குப்தா. அதோடு, டிசம்பர் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் ஜாஸ்பா படத்தின் படப்பிடிப்பை வேகமாக நடத்த திட்டமிட்டுள்ள இயக்குனர், அடுத்த ஆண்டு நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இப்படத்தை திரையிட திட்டமிட்டிருக்கிறாராம்.
ஆக, கடந்த சில ஆண்டுகளாக கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்று மற்றவர்கள் நடித்த படங்களை பார்த்து ரசித்து வந்த ஐஸ்வர்யாராய், அடுத்த ஆண்டு தான் நடித்த படமே திரையிடப்பட இருப்பதால் இப்போதே அந்த படத்தில் நடிக்க உற்சாகமாக இருக்கிறாராம்.