தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் கீரவாணியும் ஒருவர். தமிழில், வானமே எல்லை, நீ பாதி நான் பாதி, அழகன் என சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி இவரது சித்தப்பா மகன் ஆவார். அதனால் ராஜமவுலியின் நான் ஈ உள்பட பல படங்களுக்கு கீரவாணிதான் இசையமைத்திருந்தார்.
மேலும், இப்போதும் பிசியான இசையமைப்பாளராக இருந்து வரும் கீரவாணி, 2016ம் ஆண்டோடு தான் இசையமைப்பதற்கு முழுக்குப் போடபபோவதாக அறிவித்தார். அதோடு, அதையடுத்து வேறு சில பணிகளில் தான் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், எனது இசைப்பயணத்தில் நிறைய முட்டாள்களை சந்தித்தேன். அவர்களை சமாளிப்பதுதான் எனக்கு பெரிய சவாலாக இருந்தது என்று கூறியிருந்தார். ஆனால் அவரது இந்த பேட்டி தெலுங்கு பட உலகில் பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
அவருடன் பணியாற்றிய டைரக்டர்களும், பட அதிபர்களும், முட்டாள் என்று யாரை சொல்கிறீர்கள்? என்று கீரவாணிக்கு எதிராக கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இதனால் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டியிருக்கும் கீரவாணி, தன்னைப் பார்த்து எழும் கேள்விகளுக்கு எந்த பதிலும சொல்ல முடியாமல் அமைதி காத்து வருகிறார்.