டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின் பேரில் நடிகை சானா கானும், அவரது காதலர் இஸ்மாயில் கானும் போலீசால் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் இருவருக்கும் அன்றைய தினமே அந்தேரி கோர்ட் ஜாமீன் வழங்கியது.
நடிகை சானா கானும், அவரது காதலர் இஸ்மாயில் கானும் இணைந்து பெண் ஒருவருக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்ததுடன், பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளனர். இது தொடர்பாக அப்பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் சானா கானும், இஸ்மாயிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 22ம் தேதியன்று நடிகர் சாகில் கானுக்கும், இஸ்மாயிலுக்கும் இடையே ஜிம்மில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சாகில் அளித்த புகாரின் பேரிலும் இஸ்மாயில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலையில் கைது செய்யப்பட்ட சானா கானும், அவரது காதலரும் பிற்பகலில் ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.