தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் அழகிய தம்பதிகளாக வாழ்ந்து வந்தவர்கள் ஹிருத்திக் ரோஷனும், சுசானேவும். யார் கண்பட்டதோ தெரியவில்லை, இப்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் சுசானே தனது பிறந்தநாளை தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருடன் கொண்டாட கோவா சென்றார். அங்கு பிறந்தநாளையும், தீபாவளியையும் கொண்டாடினார் சுசானே. இதனிடையே ஹிருத்திக் ரோஷனும் கோவா வருவதாக இருந்தது. ஆனால் சுசானே, தனது சகோதரியுடன் கோவாவை விட்டு கிளம்பி மும்பை வந்தபிறகு தான் ஹிருத்திக் கோவா சென்றுள்ளார். பிறகு தனது குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்து பொழுதை கழித்தார். இதன்மூலம் ஒருவரை ஒருவர் புறக்கணித்தனர் ஹிருத்திக் மற்றும் சுசானே.