இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இந்திய - பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் படம் ''தேரே பின்லேடன்''. இப்படத்தில் அலி ஜாபர் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்போது அவருடன் சேர்ந்து இன்னொரு நடிகராக பவாத் கானும் நடிக்கிறார். பவாத் கானும், அலி ஜாபரும் நெருங்கிய நண்பர்கள். மேலும் இவர்கள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். தற்போது இருவரும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்போன் அறிமுக விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய அலி ஜாபர், நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளோம். எங்களுக்குள் எந்தவொரும் போட்டியும் இல்லை. நான் எப்போதும் பவாத்தின் படங்களை பாராட்டுவேன் என்றார்.
பவாத்கான் பேசுகையில், இந்தப்படத்தில் என்னுடன் அலிஜாபரும் நடிக்கிறார் என்பது எனக்கு தெரியாது. பிறகு நான் கேள்விப்பட்டேன். என்னை விட திறமையான நடிகர் அலி ஜாபர். அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.