தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடிக்கும் கொம்பன் படத்தின் படப்பிடிப்புகள் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் நடந்து வருகிறது. குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மீன் வெட்டி அருவி உள்ளது. இது காட்டாற்றில் உருவாகி இருக்கும் அருவி. உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா இடம். இந்த இடத்தில்தான் கடந்த சில நாட்களாக கொம்பன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
அருவியின் அருகில் கார்த்தி சண்டை கலைஞர்களுடன் சண்டை காட்சியில் நடித்து வந்தார். அப்போது கடந்த நான்கு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக அருவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரவு நேர படப்பிடிப்பு என்பதால் இதனை யாரும் கவனிக்கவில்லை. இடுப்பளவு தண்ணீரில் நின்று சண்டைபோட்ட கார்த்தியின் கழுத்தளவுக்கு தண்ணீர் வரவும்தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது தெரிந்தது.
உடனடியாக அனைவரும் கூச்சலிட... வனத்துறையினர் அருவிக்கு அருகில் சென்று கார்த்தி உள்பட அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர். பின்னர் அவர்கள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு திரும்பினர். வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் படப்பிடிப்பு நடத்த படப்பிடிப்பு குழு ஸ்ரீவிலல்லிபுத்தூரில் தங்கியுள்ளது.