தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோலிவுட்டில் சமீபகாலமாக விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகிய இசையமைப்பாளர்கள் ஹீரோவாக நடித்து வருவதைத் தொடர்ந்து இப்போது அருள்ராஜ் என்ற இன்னொரு இசையமைப்பாளரும் ஹீரோவாகியிருக்கிறார். இவர், உன்னை நான், குறும்புக்கார பசங்க, ஒரு சந்திப்பில் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர்.
இந்நிலையில், பூந்தோட்டக்காவல்காரன் உள்பட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கிய செந்தில்நாதன் இயக்கும் பார்வை என்ற படத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார். அதையடுத்து தடா என்ற படத்திலும் நடித்து வரும் அருள்ராஜ், கூலிப்படை என்ற படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
தனது ஹீரோ பிரவேசம் பற்றி அருள்ராஜ் கூறுகையில், சினிமாவில் மியூசிக் டைரக்டராக வேண்டும் என்றுதான் வந்தேன். ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலர் இசைபயின்ற அப்துல் சத்தாரிடம்தான் முதலில் இசை படித்தேன். அதையடுத்து, இளையராஜா பயின்ற தன்ராஜ் மாஸ்டரின் இசைப்பள்ளியில் மாஸ்டராகவும் பணியாற்றினேன். பின்னர் வேதம் புதிது தேவேந்திரனிடம் உதவியாளராக பணியாற்றிய பிறகு, டிவி சீரியல்களுக்கு இசையமைத்தேன். அப்போது சில சீரியல்களில் நடித்திருக்கிறேன்.
அதையடுத்து நான் சினிமாவில் முழுநேர இசையமைப்பாளராக வந்தேன். அப்படி இசையமைத்து வந்தபோதுதான், செந்தில் நாதன் சாரின் பார்வை படத்துக்கும் இசையமைக்க கமிட்டானேன். அப்போது ஏற்கனவே நான் நடித்திருப்பதை அறிந்த அவர், நான் அவரது கதைக்கு பொருத்தமாக இருப்பதாக சொல்லி என்னை ஹீரோவாக்கினார். ஒரு முன்னணி டைரக்டரே என்னை நடிக்க அழைத்ததால் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்தேன். அதோடு அந்த படத்தில் டபுள் ரோலில் நடித்திருக்கும் நான். 15 விதமான கெட்டப்புகளிலும் நடித்திருக்கிறேன்.
அதன்பிறகு தடா, கூலிப்படை என்ற இரண்டு படங்கள் கமிட்டாகியிருக்கிறது. இந்த இரண்டுமே அதிரடியான ஆக்சன் கதைகள் என்று கூறும் அருள்ராஜிடத்தில், ஹீரோவாக உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து விட்டால் இசையமைப்பதை விட்டு விடுவீர்களோ? என்று கேட்டால், அப்படியெல்லாம் எந்த எண்ணமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை நடிப்பும், இசையும் எனது இரு கண்கள் மாதிரி. அதனால் தொடர்ந்து இந்த இரண்டு பாதையிலும் பயணித்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் அருள்ராஜ்.