இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஐதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவர் நடிகை ஸ்வேதா பாசு. இந்திப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பின்னர் கதாநாயகியாகவும் நடித்தார். தமிழில் ரா ரா, சந்தமாமா ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் பணத்தேவைக்காக விபச்சாரம செய்யத் தொடங்கியிருக்கிறார் ஸ்வேதா பாசு.
இந்த நிலையில்தான் ஐதராபாத்தில் போலீசார் நடத்திய ரெய்டில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார் ஸ்வேதா பாசு. அதையடுத்து அவரிடம் நடந்த விசாரணையில், சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் குடும்ப செலவுக்காக விபச்சாரம் செய்ததாக சொன்னார். அதோடு தனது குடும்பத்தாரே தன்னை பணத்துக்காக இப்படி விபச்சாரம் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் புகார் கூறினார்.
அதனால், அவரை பெண்கள் காப்பகத்தில் வைத்து கவுன்சிலிங் கொடுக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. அதனால் சில மாதங்களாக பெண்கள் காப்பகத்தில்தான் இருக்கிறார் ஸ்வேதாபாசு. இந்த நிலையில், அவருக்கு சினிமாவில் சான்ஸ் கொடுக்கவும இரண்டு இந்திப்பட டைரக்டர்கள் முன்வந்துள்ளனர். அதோடு, ஸ்வேதா பாசுவை வெளியில் கொண்டு வர அவரது தாயாரும் கோர்ட்டில மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த நிலையில், மீண்டும் தனது பெற்றோரிடம் செல்ல விருப்பமில்லை என்று தெரிவித்துள்ள ஸ்வேதாபாசு, தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளாராம். அதனால் அவரது வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது, இதுபற்றி கோர்ட் முடிவெடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.