பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
அட்டகத்தி படத்தில் தினேசுக்கு ஜோடியாக நடித்தவர் நந்திதா. ஆனால் அவர் அந்த படத்தில் கமிட்டாவதற்கு முன்பே ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டாவது நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தனர். அந்த சமயத்தில்தான் பெங்களூரில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நந்திதா, தினேசுக்கு ஜோடியாக அட்டகத்தியில் நடித்தார்.
இருப்பினும், அப்படத்தின் செகண்ட் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா, நந்திதா மீது ஈகோவினால் முகத்தை திருப்பிக் கொள்ளாமல், முதல் நாள் ஸ்பாட்டுக்கு வந்ததுமே அவரிடம் கைகுலுக்கி பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்களாம். அதிலிருந்து இருவரும் உயிர்த் தோழிகளாகவும் மாறி விட்டார்கள். அப்படி தொடங்கிய அவர்களது நட்பு இப்போது இன்னும் நெருக்கமாகி விட்டது.
அதனால் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய சேதுபதியுடன் இடம் பொருள் ஏவல் படத்தில் கமிட்டான ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த படத்திலிருந்து மனீஷா யாதவ் வெளியேறியதும், உடனடியாக நந்திதாவுக்கு சிபாரிசு செய்து அவரை அந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
அதனால், வளர்ந்து விட்ட நடிகைகளே வளர்ந்து வரும் நடிகைகளுக்கு சிபாரிசு செய்ய தயங்குவார்கள். ஆனால் என்னைப் போலவே ஒரு வளர்ந்து வரும் நடிகையே எனக்கு சிபாரிசு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாதிரி ஒரு நல்ல நடிகையை, தோழியை சினிமா உலகில் பார்ப்பது ரொம்ப அரிது என்று கூறுகிறார் நந்திதா.