இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 3வது திருமணம் செய்ய இருக்கிறார், அவருக்கு கீழக்கரையை சேர்ந்த முஸ்லிம் பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் வாரிசான இவர், தொடர்ந்து படிப்படியாக முன்னேறி முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். சமீபத்தில் தனது 100வது படமான பிரியாணி படத்திற்கு இசையமைத்தார்.
யுவனுக்கு கடந்த 2005-ம் ஆண்டு லண்டனை சேர்ந்த பாடகி சுஜாயாவை காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இவர்களது திருமணம் மூன்று ஆண்டுகள் தான் நீடித்தது, 2008-ல் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து 2011ம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மதமாற்றம்
ஏற்கனவே இல்லற வாழ்வு சரியாக அமையாத சோகத்தில் இருந்த யுவனுக்கு, அவரின் அம்மாவின் மறைவும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியது. இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா திடீரென முஸ்லிம் மதத்திற்கு மாறினார். தான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுவதாக அவரே தெரிவித்தார், மேலும் தனது பெயரை கூட அவர் மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
3வது திருமணம்
இதனிடையே யுவன் ஷங்கர் ராஜா, மலேசியாவை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இப்போது அவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, மேலத்தெருவை சேர்ந்த ஜப்ருன்னிஸாவைத்தான், யுவன், 3வது திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. திருமணம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடக்கும் என தெரிகிறது.
இதுப்பற்றி யுவனின் சகோதரர் கார்த்திக் ராஜா கூறுகையில், எனது அம்மாவின் திதிக்காக நானும், அப்பாவும் மதுரை சென்றிருந்தோம். யுவன் சற்று தாமதமாகத்தான் வந்தார். அவரது முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோஷம், என்ன என்று விசாரித்த போது, அவரது திருமணம் நிச்சயம் பற்றிய செய்தி பேஸ்புக்கில் வெளியானது. விரைவில் இந்த திருமண செய்தியை அவரே முறைப்படி அறிவிப்பார் என்று கூறினார்.