துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
குறும்பட இயக்குனர் எஸ்.கல்யாண் தனது நண்பர் ஜே.ஜெயகிருஷ்ணனுடன் இணைந்து தயாரித்து, இயக்கும் படம் ''கத சொல்லப் போறோம்''. ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, காளி, பசங்க சிவகுமாருடன். 4 குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குழந்தைகளின் மனரீதியான பிரச்னைகளை அணுகும் படம். குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்த்த காலம் மறைந்து விட்டது. அதனால் அவர்களது படைப்பாற்றல் குறைந்து விட்டது. அதை எப்படி மீட்டெடுப்பது என்கிற மாதிரியான கதை.
குழந்தைகளுக்கு கதை எழுதும் ஆற்றல் இருக்கிறதா? அவர்களின் கற்பனை திறன் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக 5 லட்சம் விண்ணப்பங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி குழந்தைகளை கதை எழுதச் சொன்னார்கள். 20 நாட்களில் 50 ஆயிரம் கதைகள் வந்திருக்கிறது. இன்றும் 50 ஆயிரம் கதைகளை எதிர்பார்க்கிறார்கள். இதில் சிறந்த கதையை தேர்ந்தெடுத்து பரிசு வழங்க இருக்கிறார்கள்.
"இதனை நாங்கள் விளம்பரத்திற்காக செய்யவில்லை. கதையோடு தொடர்புடைய ஒரு பிரச்னையை பிராக்டிகலாக அணுகினோம். என்னை போன்ற இயக்குனர்களை அடையாளம் காண நாளைய இயக்குனர்கள் என்ற களம் அமைந்த மாதிரி தலைமுறை சிந்தனையாளர்களை அடையாளம் காண ஒரு களம் அமைத்தோம். அதற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது" என்கிறார் இயக்குனர் எஸ்.கல்யாண்.