தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது சினிமா தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டில் உள்ள தமிழர்கள் இணைந்து அவர்களே நடித்து, இயக்கி தயாரிக்கும் படங்கள் வெளிவரத் தொடங்கி உள்ளது. மலேசிய தமிழர்கள் பல ஆண்டுகளாக படம் எடுத்து வருகிறார்கள். சமீபகாலமாகத்தான் அது தமிழ் நாட்டில் வெளியாகிறது. கடந்த மாதம் நார்வே தமிழர்கள் இணைந்து தயாரித்த 9 ஓஸ்லே என்ற படம் வெளிவந்தது.
தற்போது டென்மார்க் தமிழர்கள் இணைந்து உயிர்வரை இனித்தாய் என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படம் டென்மார்க், கனடா, பிரான்ஸ், நார்வே நாடுகளில் நாளை (அக்டோபர் 30 வெளியாகிறது). வஸந்த் செல்லதுரை ஹீரோவாக நடித்துள்ளார். நார்வினி டேரி ஹீரோயின். தயாநிதி, குணபாலன், உள்பட பலர் நடித்துள்ளனர். டெசூபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வஸந்த் இசை அமைத்துள்ளார். டென்மார்க்க கே.எஸ்.துரை இயக்கி உள்ளார். இந்தப் படத்தை விரைவில் தமிழ்நாட்டிலும் திரையிட இருக்கிறார்கள்.