ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அடுத்தாண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நடிகர் ரன்வீர் சிங்கும், ரன்பீர் கபூரும் மோத இருக்கின்றனர். பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் ரன்பீர் கபூர். இதில், ரன்பீர் கபூர் இப்போது ''பாம்பே வெல்வெட்'' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் முடியாததால் அடுத்தாண்டு மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தப்படியாக ரன்பீர் கபூர், சாஜித் நாடியாவாலா தயாரிப்பில், இம்தியாஸ் அலி இயக்கத்தில், ''தமாசா'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்தாண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதேப்போல் நடிகர் ரன்வீர் சிங், தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், 'பஜிராவ் மஸ்தானி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரன்வீர் சிங்குடன், தீபிகா மற்றும் ப்ரியங்கா சோப்ரா நடிக்கின்றனர். சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப்படமாக உருவாகி வரும் இப்படத்தை பன்சாலி, அடுத்தாண்டு கிறிஸ்மஸ் பண்டிகையின் போது வெளியிட எண்ணியுள்ளனர். இதன்மூலம் ஒரேநேரத்தில் ரன்வீர் சிங்கும், ரன்பீர் கபூரும் மோத இருக்கின்றனர்.