தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'கத்தி' படத்தின் மூலம் தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற சமந்தா, அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிக்க சம்மதிக்காமல் சைலண்டாக இருந்து வருகிறாராம். தற்போது தமிழில் விக்ரம் ஜோடியாக 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படத்திலும், தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ஒரு புதிய படத்திலும் என இரண்டே இரண்டு படங்களில்தான் நடித்து வருகிறார். தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி இந்த இரண்டு படங்களைத் தவிர வேறு எந்த புதிய படத்திலும் அவர் இன்னும் நடிக்க சம்மதிக்கவில்லையாம். 'கத்தி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இங்கும் ராசியான நடிகையாகிவிட்ட சமந்தா ஏன் புதிய படங்களை சம்மதிக்கத் தயங்குகிறார் என்று தெரியவில்லையாம்.
தெலுங்கில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் அங்கும் புதிய படங்களில் நடிக்க சம்மதிக்கவில்லை என்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்த வரை அங்குள்ள பல முன்னணி நடிகர்களுடன் சமந்தா நடித்துவிட்டார். இதுவரை கிளாமராக மட்டுமே நடித்துக் கொண்டிருந்தவர், 'கத்தி' படம் வெற்றி என்று அறிவிக்கப்பட்டதுமே இனி நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கப் போகிறேன், என அறிவித்திருந்தார். ஒருவேளை சமந்தா இனி கிளாமராக நடிக்க மாட்டார் என சமந்தாவே சொல்லி விட்டதால் மற்றவர்கள் அவர்களை அணுகத் தயங்குகிறார்களா என்றும் தெரியவில்லை.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட சமந்தா இன்னும் சில வருடங்களில் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியிருந்ததையும் ஒரு வேளை அவர் அடுத்த வருடத்திலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து விட்டாரோ என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.