விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
1954-ம் ஆண்டு பெடரா கண்ணப்பா என்ற படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் கன்னட நடிகர் ராஜ்குமார். அப்படி தனது கலைப்பயணத்தை தொடங்கிய அவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக சுமார் 46 ஆண்டுகள் திகழ்ந்தவர்.அந்த வகையில், 2000ம் ஆண்டு வரை சுமார் 205 படங்கள் வரை நடித்திருக்கிறார். 77 வயதான அவர் 2006ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி பெங்களூரில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், கன்னட ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த நடிகர் ராஜ்குமார் என்பதால், கர்நாடக அரசாங்கமே அவரது நினைவுடத்தை பிரமாண்டமாக கட்டியிருக்கிறது. 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அந்த நினைவிடம் பெங்களூரில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த நினைவிடத்தில் 800 இருக்கைகளும், 3 அடி உயரமுள்ள ராஜ்குமாரின் வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ள. இந்த நினைவிடத்தின் அருகாமையில்தான் அவரது சமாதியும் உள்ளதாம்.
இந்த நினைவிடத்தின் திறப்பு விழா நவம்பர் மாதம் 29 ந் தேதி சிறப்பாக நடைபெற உள்ளதாம். இந்த விழாவிற்கு இந்திய சினிமாவிலுள்ள முக்கிய பிரபலங்கள் அனைவருக்கும் கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளதாம். அந்த வகையில், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி உளளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய இடம் பெறுகிறார்களாம்.