அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
லஜா, ஸ்டைல், எக்ஸ்கியூஸ்மீ, கோல்மால், 3 இடியட்ஸ் உள்ளிட்ட பல நடித்தவர், ‛யங் அண்ட் ஹேண்ட்சம்' நடிகர் சர்மான் ஜோஷி. இவர் இப்போது பாலிவுட்டின் ‛எவர்கிரீன்' நடிகை ரேகாவுடன் இணைந்து, 'சூப்பர் நானி' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், பெண்களை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க, தனக்கு ஒன்றும் பிரச்னையில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது...
பாட்டி - பேரன் உறவு தான் கதை
சூப்பர் நானி படத்தில் ரேகாஜி, பாட்டியாக நடித்துள்ளார். அவரது பேரனாக நான் நடித்துள்ளேன். இப்படத்தில் எனது கேரக்டர் பெயர் மேன். இந்தியாவில் பிறந்த மேன், சுமார் 15 ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்து விட்டு மீண்டும் இந்தியா திரும்புகிறான், இங்கு வந்து பார்த்தால் பாட்டிக்கு யாரும் மரியாதை கொடுக்க மறுக்கின்றனர். அவரது மரியாதையை பேரனான மேன் எப்படி மீட்டு அவருக்கு கொடுக்கிறார் என்பதே சூப்பர் நானி படத்தின் கதை. இதில் பாட்டி-பேரன் பாசம் ஹைலைட்டாக இருக்கும்.
சூப்பர் நானி படம் குஜராத்தி ப்ளேயான பா ஆய் மாரி பவுண்டரியின் தழுவல் தான். சூப்பர் நானியில் நடிப்பதற்கு முன்பாக நான் இதை பார்த்துள்ளேன். அப்போதே இந்த மாதிரி கதைகளில் நாமும் நடிக்க வேண்டும் என்று தோன்றியது, இயக்குநர் இந்திரா குமார் இப்படத்தை எடுப்பதாக என்னிடம் கூறியபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன், அவரிடம் இந்த கதை எனக்கு தெரியும், நிச்சயமாக நான் நடிக்கிறேன் என்றேன்.
வெற்றி நடிகை ரேகா
சூப்பர் நானி படத்தில் நடிகை ரேகா அவர்கள் நடிக்கிறார் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் ஒரு ஆச்சர்யமான நடிகை என்று சொல்வதை விட வெற்றி நடிகை என்றே சொல்லலாம். சூப்பர் நானி படத்தில் நடித்தபோது நான் அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன், இந்த வயதிலும் நடிப்பில் அவர் காட்டும் ஈடுபாடு என்னை ஆச்சர்யப்பட வைத்தது. ரேகா அவர்களிடம் மட்டுமே இதுபோன்ற விஷயங்களை பார்க்க முடியும், அவரை போன்றே நானும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஹார்ட் ஆப் தி செட் ரன்தீர் தான்
சூப்பர் நானி படத்தில் ரேகா மட்டுமல்ல, மற்றுமொரு மூத்த நடிகரான ரன்தீர் கபூர் நடித்திருக்கிறார். அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும், உண்மையான மனிதர், அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று எனக்கு தெரியும். சூப்பர் நானி படத்தின் ஷூட்டிங்கின் போது ஹார்ட் ஆப் தி செட்டே அவர் தான். ரேகாவும், அவரும் பழகிய விதம், அவர்களுக்கு இடையேயான உறவு மிகவும் பெரியது, நண்பர்கள் போல இருவரும் பழகினர்.
ஸ்வேதாவுடன் நடித்தது ஈஸியாக இருந்தது
இப்படத்தில் எனக்கு ஜோடியாக சுவேதா குமார் நடித்திருந்தார். அவர் இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான இந்திரா குமாரின் மகள். ஒரு இயக்குநரின் மகள் என்ற பந்தா இல்லாமல் ரொம்ப கூலாக நடித்தார். அவருடன் நடித்தது எனக்கு சுலபமாக இருந்தது, கேமிராவுக்கு முன்னால் மட்டுமல்ல, கேமிராவுக்கு பின்னால் கூட நன்றாக பழகக்கூடியவர். அவர் மிகவும் அமைதியான, அழகான, ஆச்சர்யமான நடிகையும் கூட.
பெண்கள் தொடர்பான படங்களில் நடிக்க தயார்
என் மனதுக்கு பிடித்த கேரக்டரை தான் நான் தேர்வு செய்து நடிக்கிறேன். மற்ற விஷயங்களை பற்றி நான் யோசிப்பது கூட கிடையாது. சூப்பர் நானி படம் முழுக்க முழுக்க நடிகை ரேகாவை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படம், இந்தமாதிரி படங்களில் நடிக்க எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, தொடர்ந்து இதுபோன்று பெண்களை முன்னிலைப்படுத்தி உருவாகும் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஒரு படத்தின் கதை ஹீரோவை முன்னிலைப்படுத்தி இருக்கிறதா இல்லை ஹீரோயினையோ அல்லது ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி இருக்கிறதா என்று நான் பார்ப்பது கிடையாது, ஒரு படத்தின் கதையை பொறுத்தே நான் தேர்வு செய்து நடிக்கிறேன், இப்போது மட்டுமல்ல, நான் எப்போதும் கதையை பார்த்து மட்டும் படங்களை தேர்வு செய்வேன்.
இவ்வாறு சர்மான் ஜோஷி கூறினார்.