ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
''வெளுத்துக்கட்டு'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அருந்ததி. முதல்படத்தில் குடும்ப பாங்காக நடித்தவர், ''நேற்று இன்று'' படத்தில் படுகிளாமராக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து சுண்டாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த எந்த படமும் அவருக்கு பெயர் பெற்று தரவில்லை. அதனால் இனி கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் தான் நடிப்பேன் என்று முடிவெடுத்தார். அதன்படி இப்போது சிபிராஜ் உடன் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இப்படத்தில் நடிக்க பல நடிகைகள் ஆடிஷனுக்கு வரவழைக்கப்பட்டு இறுதியில் அருந்ததி தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து அருந்ததி கூறுகையில், நாய்கள் ஜாக்கிரதை படம் அருமையான சஸ்பென்ஸ் கதை. இனி நான் நடிக்கும் படங்கள் எல்லாம் எனக்கு பெயர் கிடைக்கும் படி பார்த்து கொள்வேன், கண்டிப்பாக இனி நான் தேர்வு செய்யும் படங்கள், கேரக்டர்கள் எல்லாம் அப்படி தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.