வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சில வருடங்கள் முன்னர் வரை தமிழ் சினிமவின் தரமான நடிகர்களுள் ஒருவர் என பெயர் வாங்கியிருந்தவர் ஜெயம் ரவி. அடுத்தடுத்து தொடர்ச்சியாக அவருடைய படங்கள் வெளிவந்து, அவருக்கு குடும்பத்து ரசிகர்களையும், இளம் ரசிகர்களையும் நிறையவே பெற்றுத் தந்தது. இன்றும் அவர் நடித்த படங்களான 'சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும்' படங்களை தொலைக்காட்சியில் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் தொடர்ந்து பல பேர் பார்த்து வருகிறார்கள். ஆனால், சமீபத்திய ஜெயம் ரவி படங்களுக்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை இல்லாமல் இருக்கிறது. இதற்கு முன் அவர் நடித்து வெளிவந்த 'நிமிர்ந்து நில்' படம் கூட பல தடைகளைக் கடந்துதான் வெளிவந்தது.
தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'பூலோகம்' படம் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்ட பின்னும் பல மாதங்களாக வெளியாகாமலே உள்ளது. அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில், நயன்தாராவுடன் 'தனியொருவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சுராஜ் இயக்கத்தில் அஞ்சலி, த்ரிஷாவுடனும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். லட்சுமணன் இயக்கத்தில் ஹன்சிகாவுடன் 'ரோமியோ ஜுலியட்' படத்திலும் நடித்து வருகிறார்.
'பேராண்மை' படத்திற்குப் பிறகு வெளிவந்த “தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன், நிமிர்ந்து நில்” ஆகிய படங்கள் வியாபார ரீதியாக பெரிய வசூலையும் தரவில்லை. இனி, அடுத்தடுத்து அவருக்குத் தொடர்ச்சியாக படங்கள் வெளிவர உள்ளன. தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்துமே அடுத்த ஆண்டிற்குள் மொத்தமாக வெளிவந்துவிடும். அவையாவது அவருக்கு ஜெயத்தைத் தரட்டும்...!