மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பண்ணையாரும் பத்மினியும் படத்திற்கு பிறகு, ஜிகர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற இரண்டு படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் விஜயசேதுபதி. தற்போது புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், வன்மம், மெல்லிசை, இடம்பொருள் ஏவல், நானும் ரெளடிதான், திருடன் போலீஸ் என பல படங்களில் நடித்து வருகிறார்.
இருப்பினும், உடனடியாக வெளியாகும் என அவர் எதிர்பார்த்த, திருடன் போலீஸ், வன்மம் படங்கள் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகாததால் வெளிவர தாமதமாகி வருகின்றன. இதனால் தனக்கும், ரசிகர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகிவிடும் என்று கருதும் விஜயசேதுபதி, தற்போது தான் தயாரித்து முதிர்ச்சியான வேடத்தில் நடித்துள்ள ஆரஞ்சு மிட்டாய் படத்தை வெளியிடும் முயற்சிகளில் தீவிரமடைந்திருக்கிறார். டிசம்பரில் அப்படத்தை ரிலீஸ் செய்கிறாராம்.
இந்த படத்தில் தனது கெட்டப் பற்றி விஜயசேதுபதி விடுத்துள்ள செய்தியில், பார்க்கத்தான் முதிர்ச்சியான வேடம். ஆனால் அந்த கேரக்டர் செய்யும் விசயங்கள் இளவட்டத்தனமாக இருக்கும். குறிப்பாக என் படங்களை தொடர்ந்து ரசித்து வரும் ரசிகர்களுக்கு அந்த வேடம் ரொம்ப பிடிக்கும் என்று கூறுகிறார். மேலும், இதுவரை நடிப்பதோடு நிறுத்திக்கொண்டு வந்த விஜயசேதுபதி, இந்த படத்தை தயாரித்திருப்பதோடு, வசனங்களையும் தானே எழுத முடிவு செய்திருக்கிறார்.