தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
''தாமிரபரணி'' படத்திற்கு பிறகு மீண்டும் விஷால்-ஹரி கூட்டணியில், இந்த தீபாவளி வெளிவந்திருக்கும் அதிரடி படம் பூஜை. முதன்முறையாக ஸ்ருதிஹாசன் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் விஷால். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஊருக்காக சென்று, தியேட்டரில் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார் விஷால். முதற்கட்டமாக இன்று(அக். 27ம் தேதி) மதுரை வந்த விஷால், மதுரை, குரு தியேட்டரில் காலை 11 மணியளவில் ரசிகர்களை சந்தித்தார். அவருடன் இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் சூரியும் பங்கேற்றனர்.
ரசிகர்கள் முன்னிலையில் விஷால் பேசுகையில், இப்படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க ரசிகர்கள் தான் காரணம். வெறுமென டி.வி., முன் அமர்ந்து ரசிகர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. நேரடியாக வந்து சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். மேலும் எனது நன்றி பயணத்தை மதுரையில் இருந்து துவங்க வேண்டும் என எண்ணினேன். அதன்படி இப்போது இங்கு வந்துள்ளேன். எனது அடுத்தபடம் பொங்கலுக்கு வர இருக்கிறது. அப்போது மீண்டும் வந்து உங்களை சந்திப்பேன் என்றார்.
நடிகர் சூரி பேசுகையில், நான் இந்த ஊரின் மண்ணின் மைந்தன். இன்று நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு முழுக்க முழுக்க ரசிகர்களாகிய நீங்கள் தான் காரணம். உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஏற்கனவே நான் விஷால் உடன் பாண்டியநாடு படத்தில் நடித்துள்ளேன். அந்தப்படத்தை காட்டிலும் பூஜை படம் எனக்கு மேலும் ஒரு பெரிய வெற்றியை தந்துள்ளது என்றார்.