‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
எந்த ஒரு செயலுக்குமே பின்னணி காரணம் ஒன்று இருக்கும் என்பார்கள். துப்பாக்கி படம் முடிந்ததுமே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. துப்பாக்கி படத்திற்குப் பிறகு வந்த தலைவா படம் தத்தளித்ததையும், ஜில்லா படத்தின் வெற்றி ஜில்லென்று இல்லாமல் போனதாலும் கத்தி படத்தில் ஒரு கணக்குடனேயே முருகதாஸும், விஜய்யும் உழைத்திருக்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நேற்று, தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கத்தி படம் சம்பந்தமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சில வாரங்களுக்கு முன்புதான் எடுக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸில் விஜய் பேசும் ஆவேசமான வசனக் காட்சி தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. 2ஜி உட்பட பல ஊழல்களைப் பற்றி மிகவும் கவனத்துடன் அந்த வசனம் எழுதப்பட்டுள்ளது.
அந்த வசனத்தை விஜய் ஒரு மேடையில் அப்படியே பேச வேண்டும் என தான் ஆசைப்படுவதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேற்றைய பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆக, விஜய்யின் அரசியல் ஆசையை மனதில் வைத்தே அந்த வசனம் எழுதப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
படம் வெளிவருவதற்கு பல பிரச்சனைகள் எழுந்த போது வாயை மூடிக் கொண்டிருந்த விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும், படம் வெளியாகி வெற்றி பெற்ற பின் முதன் முதலாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இப்படி பேசியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது.
தியேட்டர்களில் ரசிகர்களின் கைத்தட்டல்களுக்காக மட்டுமே எழுதப்பட்ட வசனம் அது என்பதை அவர்கள் மறுக்க முடியாது என்பதே உண்மை.