ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மங்காத்தா ஹிட்டுக்கு ப்பிறகு கார்த்தியை வைத்து வெங்கட்பிரபு கிண்டிய பிரியாணி ப்ளாப் ஆனது. அதையடுத்து இப்போது சூர்யாவைக்கொண்டு மாஸ் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி அன்று வெளியிட்டார். ப்ளாக் அண்ட் ஒயிட்டில் வெளியான அந்த கெட்டப்பில் ஒரு டெரர் லுக்கில் இருந்தார் சூர்யா.
இந்தநிலையில், அப்படத்தில் சில பேய்களின் நிறைவேறாத ஆசைகளை சூர்யா நிறைவேற்றுவது போன்ற கதையில் நடித்துக்கொண்டிருப்பதாக அந்த படத்தின் கதை பற்றியும் செய்திகள் கசிந்தன. என்றாலும் அதைப்பற்றி அப்படத்தின் டைரக்டரான வெங்கட்பிரபு எந்த மறுப்பும் சொல்லவில்லை. ஆனால், அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹாலிவுட் படங்களில் வெளியானது அதை அவர் அப்பட்டமாக காப்பியடித்திருக்கிறார் என்று வெளியான செய்திக்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ள செய்தியில், மாஸ் படத்திற்காக நாங்கள் வெளியிட்ட சூர்யாவின் கெட்டப்புக்கு மஷாட் என்று பெயர். இதுபோன்று பல படங்களின் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அந்த பாணி இந்த கெட்டப்புக்கு தேவைப்பட்டதால் அதை கையாண்டிருக்கிறோம். மற்றபடி ஹாலிவுட் சாயலில் போஸ்டர் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நாங்கள் செய்யவில்லை என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார்.