பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சேது படத்தில் எப்படி மனநிலை பாதிக்கப்பட்ட கேரக்டரில் நடிக்க தன்னை முழுசாக அர்ப்பணித்தாரோ அதேபோல் அதையடுத்து, காசி, பிதாமகன், அந்நியன் என ஒவ்வொரு படங்களிலுமே அந்தந்த கதாபாத்திரங்களாக பிரதிபலித்து வருகிறார் விக்ரம். அந்த வகையில், இப்போது ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஐ படம் மிகவும் முககியத்துவம் வாய்ந்தது.
அந்நியனில் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்த விக்ரம், இந்த ஐ படத்தில் நான்கு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அதில் இரண்டு வேடங்களுக்காக தன்னை ரொம்பவே வருத்தி எடுத்து நடித்திருக்கிறார். பாடி பில்டராக ஒரு வேடம், இன்னொன்று ரெமோ போன்று ஒரு ஸ்டைலிஷான வேடம். ஆனால் இந்த இரண்டையும் விட மனிதன் பாதி மிருகம் பாதி அவர் நடித்துள்ள வேடமும், இன்னொரு ஒல்லிபச்சானாக நடித்துள்ள வேடத்திற்காகவும்தான் அதிக சிரத்தை எடுத்து நடித்துள்ளார் விக்ரம்.
குறிப்பாக, தனது உடல் எடையை பாதிக்கு மேல் குறைத்து அவர் நடித்துள்ள அந்த ஒல்லியான வேடத்திற்காக, டாக்டர்கள், டயட்டிஸ்டுகளை அணுகி, எந்த மாதிரியான உணவுகளை தவிர்த்தால் உடல் எடையை குறைக்க முடியும். அதோடு எந்த அளவு வரை குறைத்தால் உடம்பு பாதிக்காமல் இருக்கும் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு இந்த ரிஸ்க்கை எடுத்திருக்கிறார் விக்ரம்.
மற்றபடி இந்த வேடம் கதையில் முக்கியமானது என்றபோதும், விக்ரமை அந்த அளவுக்கு வருத்தி எடுக்க டைரக்டர் ஷங்கருக்கு உடன்பாடு இல்லையாம். ஆனால் விக்ரம்தான் எதையும் வித்தியாசமாக செய்ய நினைப்பதால் இந்த கேரக்ருக்காக நான் கஷ்டப்பட தயார் என்று மாதக்கணக்கில் அதற்கான பயிற்சிகளை எடுத்து தன்னை அடையாளமே தெரியாதவராக மாற்றி, ஷங்கர் முன்வந்து நின்று அதிர்ச்சி கொடுத்தாராம். விக்ரமை அந்த கோலத்தில் பார்த்த ஷங்கர், சீக்கிரமே இந்த கெட்டப்புக்கான காட்சிகளை எடுத்து விட்டு விக்ரமை பழையநிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று அவசரஅவசரமாக படப்பிடிப்பை நடத்தினாராம்.